போலி
தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான பேர்களைப் போல நானும் ஒரு சினிமா ரசிகன்தான். எனவே அதுசார்ந்த விஷயங்களை வாசிப்பதில், தெரிந்து கொள்வதில் கூடுதலாகவே ஆர்வம் உண்டு. அப்படி நாம் விரும்பி ரசிக்கும் சினிமாவில், வெள்ளித்திரையில் தங்களது முகத்தை சில நொடிகளேனும் பார்த்து விட வேண்டி காத்திருப்போர் பலர் உண்டு. ஆனால், டைட்டிலில் பெயர் வராமல், குறைந்தபட்சம் தங்களது பெயர் கூட வெளியே தெரியாமல் உழைக்கும் பலரும் உண்டு. அப்படி ஒருவரான ஸ்டண்ட் கலைஞர் 'தண்டர்' தவுலத் என்பவரின் கதையே அபுல் கலாம் ஆசாத் அவர்கள் எழுதியுள்ள 'போலி' நாவல். அட்டைப்படம் சிறுவயதில் இருந்து எனது சினிமா ஆர்வத்தின் ஒரு பகுதி என்பது பெரிய திரையோ, தொலைக்காட்சியோ படம் துவங்குவதற்கு முன்பு போடப்படும் டைட்டில்களை ஆர்வமாக கவனிப்பதில் துவங்கும். இப்போது போல 'எண்ட் க்ரெடிட்ஸ்' எல்லாம் அப்போது கிடையாது அல்லவா? அதன் வழி அறிமுகமான பெயர்கள் பல உண்டு. டிசைன்ஸ்: டாக்டர் உபால்டு, ஆப்டிக்கல்ஸ்: எஸ்.ஏ.அஜீம், சத்யநாராயணா, ரீ ரிக்கார்டிங்: ஜெ.ஜெ.மாணிக்கம் (AVM - E தியேட்டர்), டைட்டில்ஸ்: கரிசல் ராஜா ... என அந்த பட்டியல் நீளும்.